search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேசிய பசுமைப்படை"

    • கிருஷ்ணகிரியில் தேசிய பசுமைப்படை, சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.
    • பயிற்சி முகாமில் சுற்றுச்சூழல் பாதுகாக்க வேண்டிய மரங்கள் நடுவதன் அவசியம் குறித்தும், பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக மஞ்சப்பை பயன்பாடு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தேசிய பசுமைப்படை மற்றும் சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கி ணைப்பாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் நடந்தது.

    இதில், மாவட்ட கல்வி அலுவலர் மணி மேகலை, மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளர் வெங்க டேசன், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் வெங்கடேசன், மிஷன் இயற்கை கல்வி அலுவலர் சுமிக்ஷா, பசுமைத் தோழர் பிருந்தா, சமூக வன விரிவாக்க அலுவலர் சக்திவேல், மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் வடிவேலு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி அலுவலர் வினோதினி மறறும் ரங்கராஜ் ஆகியோர் பங்கேற்று பயிற்சி அளித்தனர்.

    பயிற்சியில், தற்போதைய சூழ்நிலையில் காடுகள் சுருங்கி வருவது குறித்தும், எதிர்கால சந்ததியினர் வாழ்வதற்கு நல்ல உகந்த சூழ்நிலைக்கான பூமிமை விட்டுச்செல்வது நமது தலையாய கடமை என்றும், ஒவ்வொரு நாளும் பிளாஸ் டிக் பைகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ஏற்படுகின்ற சுற்றுச்சூழல் பாதுகாக்க வேண்டிய மரங்கள் நடுவதன் அவசியம் குறித்தும், பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக மஞ் சப்பை பயன்பாடு குறித்து எடுத்து கூறினார்.

    பயிற்சியின் முடிவில், தேசிய பசுமைப்படை மற்றும் சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கணைப்பாளர்களுக்கு கிருஷ்ணகிரி தமிழ்நாடு மாசுக்கட்டுபாடு வாரியம் சார்பாக மஞ்சப்பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இந்த பயிற்சியினை பள்ளி யின் தலைமையாசிரியர் மகேந்திரன் ஒருங்கிணைத் தார். பயிற்சிக்கான ஏற் பாடுகளை கிருஷ்ண கிரி சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் தீர்த்தகிரி, கல்வி மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர்கள் கிருஷ்ணகிரி மகேந்திரன், ஓசூர் பாலாஜி ஆகியோர் செய்திருந்தனர்.

    ×